Thursday, November 10, 2011

எனக்குள், நான் போராட்டம்...


இங்கு
ஏமாற்றங்கள் என்னையே விழுங்கி
ஏப்பம் இடுகின்றன..
எதிர்பார்ப்புக்கள், எண்ணங்கள்
எதிர்மறை செய்கையைக் காட்டுகின்றன..
நீண்ட என் பயணங்களில்
ஏக்கங்கள் மட்டும் தொடர்கின்றன..
வெற்றிகள் முற்றுப்புள்ளிகளுக்குள்
முழுதாய் புதைந்து விட்டன..

ஒரு வருடத்துக்குள்
என் வண்ண மய வாழ்க்கை
சாயம் போய் சாய்ந்தாடுகின்றது..
கனவுகளைக் கல்லறைக்குள் புதைத்தவள் நான்..
அன்று எனக்குள் இருந்த அனைத்தும்
இன்று புதைகுழிக்குள் புகுந்து விட்டன..
சந்தோசம்,
வெற்றிக் களிப்பு எல்லாம்
விடை பெற்று பல நாட்கள் ஆகின்றன..
இன்று என்னுள்..,
தோற்கடிக்கப்பட்ட இலட்சியங்கள்,
கலங்கிப் போன கனவுகள்,
விடைக்குள் வராத எதிர்காலம்,
இவற்றுடன்
கொஞ்ச நஞ்ச
எதிர்பார்ப்புகளின்
எச்ச சொச்சங்களும் மீதம் இருக்கின்றன..
-இனியவள் இதயா-

0 comments:

Post a Comment